கவிதை

உணர்ச்சிக் கூட்டத்தின்
ஒட்டுமொத்த வெளிப்பாடே!


சூல்கொண்ட வார்த்தைகள்
அணிவகுக்கும் மாநாடே!


மௌனத்தில் அரங்கேறி
மனதுக்குள் இசைக்கும் ஓசையே




கீறல்களில் உண்டாகும்
கிரணச்சூரியனே!


நீ
மனமுடித்தப் பின்புதான்
கைமைக் காகிதம்
அலங்கரித்துக் கொள்கிறது


சிந்தனை வீட்டில் வளர்கிறாய் - நீ
காலத்தின் ஏட்டில் பதிகிறாய்!

1 comment:

  1. sindhanai yaedu kalaththin veedu ,thelindha neerodaipol oru aksharam.
    vetru kakidhathin vetriththilagam indha kavidhai.

    -Hemaganesan

    ReplyDelete