நட்பு



சொந்தமில்லை பந்தமில்லை.......
ரத்தத்தில் பிறந்த உறவுமில்லை......
இது
உணர்வுகளில் மலர்ந்து
உயிரில் வளரும் 
அழகான உறவு!

செல்லமாய்  கோபங்கள்....
சின்னதாய் சிணுங்கல்கள்.....
இந்த உறவில் மலரும் இனிமையான நிமிடங்கள்!

பாதங்கள் தேய்ந்து போனாலும்
பயணங்கள் முடிவதில்லை......
வார்த்தைகள் தீர்ந்து போனாலும்
எண்ணங்கள் தீர்வதில்லை......
உணர்வுகள் உலர்ந்து போனாலும்
இந்த
உறவு உதிர்வதில்லை!